கத்தி படத்தைப் பொறுத்தவரை எனக்கு மிக முக்கியமான படம்: அனிருத்!!!

20th of August 2014
சென்னை:படங்களில் வித்தியாசமான இசையை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டவர் அனிருத். அதோடு, விஜய்யின் கத்தி படத்திற்கும் இசையமைத்து மேல்தட்டு இசையமைப்பாளர்களை ஒரு உலுக்கு உலுக்கி விட்டார் அனிருத்.
 
மேலும், கத்தி படத்தைப் பொறுத்தவரை தனக்கு மிக முக்கியமான படமாக நினைக்கிறார் அனிருத். அதனால் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வரும் அவர், இப்படத்திற்கு எதிர்ப்பாக மாணவர் அமைப்புகள் கொடி பிடித்திருப்பதால் மனதளவில் கலவரத்துடன் காணப்பட்டார். ஆனால், இப்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால், பாடல்களை தான் முடித்துக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அந்த விசயங்களை மனதில் போட்டு குழப்பாமல் கடைசி பாடலை பதிவு செய்யும் வேலைகளில் இறங்கி விட்டார்.

அந்த பாடலை பாடப்பேகிறவர் விஜய். அதனால் அவரும் ஏற்கனவே தனக்கு தரப்பட்ட டியூனை மைண்டில் ஏற்றி பயிற்சி செய்து கொண்டிருக்க, இன்னும் ஓரிரு தினங்களில் அந்த பாடலும் ரெக்கார்டிங் செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடக்கிறதாம். அதோடு கத்தி படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம்.

விஜய் பாடப்போகும் இந்த பாடல் பற்றி அனிருத் கூறுகையில், எனது ஒவ்வொரு அவுட்புட்டுமே சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். அதிலும் இது விஜய் சார் படம் என்பதால் எனக்கு ரொம்ப ஸ்பெசல். அதனால் ரசிகர்கள் இதுவரை கேட்டிராத அற்புதமான டியூன் மற்றும் இசைக்கலவையை செய்திருக்கிறேன். அதனால் கத்தி படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆசசர்யத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்கிறார் அனிருத்.

Comments