அரை சதம் அடித்த அம்பிகா!!!

17th of August 2014
சென்னை::நடிகை அம்பிகா அரை சதம் அடித்துள்ளார். ஆம், நடிகை அம்பிகா நேற்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடினார்.

1980 களில் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் அம்பிகா.

16வயதிலேயே மலையாளப் படங்களில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை தோடங்கிய அம்பிகா, 1979ம் ஆண்டு சக்களத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல் என்று முன்னணி நாயகர்களுடன் ஜோடியாகன் அடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.


கேரள மாநிலத்தைச் சேர்ந்த அம்பிகா, திருவனந்தபுரத்தின் கள்ளறாவில் உள்ள அவரது தரவாடான (பிறந்த வீடு) அம்பிகாபவனில் தனது 50வது பிறந்த நாளை மிக எளிமையாக தனது குடும்பத்தினருடன்  நேற்று கொண்டாடினார்.

Comments