திருமணத்திற்குப் பிறகும் நடிப்பை தொடரும் அமலா பால்!!!

8th of July 2014
சென்னை:விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியிருந்த அமலா பால், தற்போது மீண்டும் நடிப்பை தொடர முடிவு செய்துள்ளார்.

தற்போது தேனிலவை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள அமலா பால், வந்ததும் இரண்டு படங்களில் நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பே, அவர் நடித்து வந்த ‘வேலையில்லா பட்டதாரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ ஆகியப் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டார்.


தற்போது, மிலி, லைலா ஓ லைலா ஆகிய இரு மலையாள படங்களில் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து குறித்து கூறிய அமலா பால், “மிலி, லைலா ஓ லைலா படங்களில் நடிக்க உள்ளேன். மிலி படத்தில் நான் ஆசைப்பட்ட எனது கனவு கேரக்டர் அமைந்துள்ளது. இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அடுத்து மோகன்லாலுடன் லைலா ஓ லைலா படத்தில் நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு ஆகஸ்டில் துவங்குகிறது. ஜோஷி இப்படத்தை இயக்குகிறார். அவர் திறமையான டைரக்டர்.” என்று தெரிவித்தார்.

Comments