சினிமாவில் திறமை என்பதை விட அதிர்ஷ்டம்தான் முக்கியம்: பார்வதிமேனன்!!!

4th of July 2014
சென்னை:சசி இயக்கிய பூ படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்த பார்வதிமேனன் அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக அற்புதமாக நடித்திருந்தார். ஆனபோதும் அதன்பிறகு அவருக்கு தமிழில் படமே இல்லை. அதையடுத்து, தனுசுடன் மரியான் படத்திலும் நடித்தார். ஆனால் அந்த படமும் தோல்வியடைந்து விட்டதால் அடுத்தபடியாக கோலிவுட்டில் பார்வதிக்கு யாரும் சான்ஸ் கொடுக்கவில்லை.
 
ஆனால், உத்தமவில்லன் படத்தில் நடிக்கும் கமல் மட்டும் அந்த படத்தில் ஜெயராமுக்கு மகளாக தனக்கு மருமகளாக நடிக்கும் ஒரு வேடத்தில் நடிக்க பார்வதி மேனுக்கு சான்ஸ் கொடுத்துள்ளார். கதாநாயகி அல்லாத வேடம் என்றபோதும் கமலுடன் நடிக்கிற வாய்ப்பு என்பதால் அந்த படத்தை ஏற்று நடித்துள்ள பார்வதி மேனன் இப்போது அப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துககொண்டிருக்கிறார்
 
இதுபற்றி அவர் கூறுகையில்:- சினிமாவில் திறமை என்பதை விட அதிர்ஷ்டம்தான் முக்கியம். இதை என் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். மேலும், இதற்கு முன்பு தமிழில் நான் நடித்த படங்கள் தோல்வியடைந்ததால் ராசியில்லாத நடிகையாகி விட்டேன். இருப்பினும், தமிழில் காதல் ரோஜாவே படத்தில் 13 வருடங்களுக்கு முன்பு நடித்து விட்டு, படமே இல்லாமல் சென்ற பூஜாகுமாரை மீண்டும் கொண்டு வந்து ராசியான நடிகையாக்கியது போன்று இப்போது என்னையும் உத்தமவில்லன் மூலம் கமல சார் ராசியான நடிகையாக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
 
இப்படி சொல்லும் பார்வதிமேனன், உத்தமவில்லன் மூலம் கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகி விட்டது. அதோடு, இந்த படம் ஹிட்டாகி என்னை ராசியான நடிகை ஆக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் பார்வதிமேனன்.

Comments