சிவா இயக்கும் அஜித்தின் அடுத்த பட அப்டேட்; அஜித் - சமந்தா - ராணா!!!

17th of June 2014
சென்னை:சிறுத்தை', 'வீரம்' படங்களை இயக்கியவர் சிவா. அடுத்த படத்தை அஜித்தை வைத்து இயக்க உள்ளார். சிவா தற்போது அஜித் படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை. வித்யாபாலன் தான் ஹீரோயின் என்பதில் உண்மை இல்லையாம். சமந்தாவை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்ற யோசனை இருக்கிறதாம்.
 
மங்காத்தாவில் தொடங்கி அஜீத் நடித்த ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் பல இளவட்ட ஹீரோக்களும் நடித்தனர். தான் ஹீரோ என்றபோதும் அவர்களின் கேரக்டர்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்க வைத்தார் அஜீத். அதோடு, ஆரம்பம் படத்தில் தெலுங்கு நடிகர் ராணா அஜீத்தின் நண்பராக நடித்தார். அவருக்கும் அந்த கதையில் முக்கியத்துவம் இருந்தது.
 
இந்த நிலையில், வீரம் படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் அஜீத், மீண்டும் ராணாவுக்கும் தனது படத்தில் நல்லதொரு வேடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். அதனால் தற்போது தமிழை விட தெலுங்கில் அதிகமான படங்களை இயக்கி வரும் சிவா, அஜீத்தைக்கொண்டு தான் இயக்கும் அடுத்த படத்தில் ராணாவுக்கு முக்கிய வேடம் கொடுப்பதோடு, அப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்குகிறாராம்.
 
மேலும், அந்த படத்தில் முதலில் வித்யாபாலனை அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் சிவா. ஆனால், ஹீரோவுக்கு இணையான தனது கதாபாத்திரமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வித்யாபாலன் இவர் சொன்ன கேரக்டரில் நடிக்க ஒத்துவரவில்லையாம். அதனால் இப்போது சமந்தாவிடம் பேசியுள்ளார். அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பு என்றதும் அவரும் உடனே ஓ.கே சொல்லி விட்டாராம். ஆக, அஞ்சானில் சூர்யா, கத்தியில் விஜய், பத்து எண்ணறதுக்குள்ள படத்தில் விக்ரமுடன் நடித்துள்ள சமந்தா, அடுத்து அஜீத்துடனும் நடித்து கோடம்பாக்கத்தின் நம்பர்-ஒன்ரெடியாகி விட்டார்.
 
சிவா இயக்கும் படங்களுக்கு எப்போதும் தெலுங்கில் மவுசு இருக்கிறது. இதனால் தன் மூன்றாவது படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
 
தெலுங்கு மார்க்கெட்டையும் தக்கவைத்துக் கொள்வதற்காக ராணாவும் அஜித்துடன் நடிக்க இருக்கிறார். 'ஆரம்பம்' படத்தில் அஜித்தும், ராணாவும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

Comments