21st of June 2014
சென்னை:‘ஜீ’, ‘தீ’, ‘உ’ என ஒற்றை எழுத்தில் தலைப்பு வைக்கும் வரிசையில் அடுத்த வரவிருக்கும் படம் தான் ‘ரு’. ‘ரு’ என்ற தமிழ் எழுத்துக்கு ஐந்து என்று ஒரு அர்த்தம் உண்டு. பஞ்ச பாண்டவர்கள், பஞ்ச பூதங்கள் என இதிகாசம் முதல் சமீப காலம் வரை ஐந்து என்ற எண் மிகவும் முக்கியத்துவம் உள்ள எண்ணாகவே பார்க்கப்படுவது உங்களுக்கே தெரியும்.
அப்படியானால் இந்தப்படத்தின் கதைக்கும் ஐந்து என்கிற எண்ணிற்கும் உள்ள தொடர்புதான் என்ன? சமூகத்தில் வாழக்கூடாத, வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாட புறப்படுகிறான் ஒரு இளைஞன். சினிமாவில் நாயகனாக வர கனவு காணும் அவன், நிஜ வாழ்வில் நாயகனாக ஆகிறானா என்பதை அந்த ஐந்து பேர்தான் தீர்மானிக்கின்றனர். இதுதான் கதை.
விஜய் டிவியில் ‘சரவணன் மீனாட்சி’ மூலம் கலக்கிவரும் இர்பான் தான் ‘ரு ’ படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். சர்வதேச அரங்கில் நமது நாட்டை தலைகுனிய வைக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை படம் பிடித்து காட்ட இருக்கிறது இந்த ‘ரு ’. இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது.
Comments
Post a Comment