கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்ற 'நெடுஞ்சாலை!!!

9th of June 2014
சென்னை::சூர்யா-ஜோதிகா நடித்த 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கியப் படம் 'நெடுஞ்சாலை' இப்படத்தில் நாயகனாக ஆரியும், நாயகியாக புதுமுகம் ஷிவதவும் நடித்திருந்தார்கள்.

தேசிய நெடுஞ்சாலைகளை ஓடும் லாரியில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. மக்களிடையெ வரவேற்பு பெற்ற தமிழகத்தில் வெற்றிப் படமாக அமைந்த இப்படம் சமீபத்தில் கேரளாவில் வெளியானது.

பொதுவாக, கேரளாவில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி தமிழ் ஹீரோக்களின் படங்களுக்கு தான் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால், நெடுஞ்சாலை அதை முறியடித்து கேரள மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, முதலில் பத்து திரையரங்களில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம், மேலும் முப்பது திரையரங்கங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டும் இன்றில் கேரளாவில் இப்படம் பெற்ற வெற்றி குறித்து கூறிய இயக்குநர் கிருஷ்ணா, இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு அடுத்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்ற பாதையை போட்டுக்கு கொடுத்திருக்கிறது, என்று தெரிவித்துள்ளார்.

Comments