இந்தி படங்களிலும் நடிப்பதற்கு கல்லெறிந்து வருகிறாராம் பவர்ஸ்டார் சீனிவாசன்

28th of June 2014
சென்னை:லத்திகா என்ற படத்தை தயாரித்து, நடித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அந்த படத்திற்கு வித்தியாசமான பப்ளிசிட்டி செய்து 300 நாட்கள் வரை ஓட வைத்தார். அதனால் அந்த படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்படாத அவர், சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டார். அதனால், யார் அந்த வித்தியாசமான நடிகர் என்று பவர்ஸ்டாரை தேடிச்சென்று தனது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு புக் பண்ணினார் சந்தானம்.
 
அந்த படத்திற்கு பிறகு பல படங்களில் வேகமாக வளர்ந்த அவர், பின்னர் மோசடி வழக்கில் சிக்கி சிதைந்து போனார். இருப்பினும் தற்போது மீண்டும் எழுந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில், கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் ஜானி படத்தில் ரஜினி நடித்தது போன்ற கெட்டப்பில் நடிக்கிறார். ஏற்கனவே எனக்கு போட்டி சூப்பர் ஸ்டார்தான் என்று மேடைகளில் முழக்கமிட்டு வந்த பவர்ஸ்டார் இந்த வாய்ப்பு மூலம் தன்னையும் சூப்பர் ஸ்டார் போன்ற அந்த படத்தில் பிரதிபலிக்கிறாராம்.
 
அதோடு, தற்போது ஐ படத்தில் நடித்திருக்கும் பவர்ஸ்டார் அந்த படத்தில் தனக்கு வித்தியாசமான வேடம் என்பதால், அப்படம் வெளியான பிறகு தனக்கு புதிய படங்கள் பெரிய அளவில் கமிட்டாகும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர், அடுத்து இந்தி படங்களிலும் நடிப்பதற்கு கல்லெறிந்து வருகிறாராம். கோலிவுட்டில் மட்டுமே தனது திறமை முடங்கி விடாமல் மெல்ல மெல்ல அண்டை மாநில மொழிப்படங்களிலும் நடித்து இந்திய அளவில் கலக்கி எடுக்கப்போகிறாராம். பவரின் இந்த ஸ்டேட்மென்டை தொடர்ந்து மீண்டும் அவரைப்பற்றி கோலிவுட்டில் பரவலான டாக் எழுந்துள்ளது.

Comments