90 அப்பாவி குழந்தைகளை கடத்தி சென்று கொடுமைப்படுத்தும் விஜய்!!!

5th of June 2014
சென்னை:துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து விஜய், முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படம் கத்தி. இதன் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் அழகிய தமிழ் மகன் படத்துக்கு பின் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார்.
 
கத்தி’ படத்தின் கதை தற்போது இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனராம்.
 
அப்படத்தில் வில்லன் விஜய் 90 அப்பாவி குழந்தைகளை கடத்தி சென்று கொடுமைப்படுத்துவதோடு அவர்களை பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு அரசிடம் பேரம் பேசுவதாகவும், அவரது சதியை இன்னொரு விஜய் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதையாம்.
முருகதாஸின் உதவியாளர் ஒருவர் சமீபத்தில் சென்னையில் உள்ள பாரில் குடிபோதையில் உளறியதாகவும் அதை அருகில் இருந்து கேட்ட அவருடைய நண்பர்கள் மூலம் வெளியே கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த கத்தி படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஏற்கெனவே இந்த படத்தின் கதை வெளியானதாக கூறப்பட்டது. மேலும் ஜீவா நடித்துவரும் யான் படமும் கத்தி படத்தின் கதையும் ஒன்றே எனவும் கூறப்படுகிறது. எது எப்படியோ விஜய் முருகதாஸ் கூட்டணிக்ககவே இந்த படம் வெற்றி பெறும் என்பதே உண்மை.

Comments