எவ்வாறு காதல் வயப்பட்டோம்? விஜய்- அமலாபால் பேட்டி!!!

26th of May 2014
சென்னை::
நடிகை அமலாபாலுக்கும், டைரக்டர் விஜய்க்கும் வருகிற 12-ந் தேதி திருமணம் நடக் கிறது. இது காதல் திருமணம் ஆகும். விஜய் இயக்கிய தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது, இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இவர்கள் காதலுக்கு இருவரின்  பெற்றோரும் சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் திவீரமாக நட்ந்து வருகிறது.
சாந்தோம் நாமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்க உள்ளது. திருமணம் குறித்து விஜய், அமலாபால் இருவரும் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, விஜய் கூறும் போது, ’அமலாபாலும் நானும் முதலில் நண்பர்களாகத்தான் பழகினோம். எங்களுக்குள் ஆரம்பத்தில் காதல் இல்லை. ஆனால், பத்திரிகைகளில் எங்களுக்குள் காதல் என்று கிசு, கிசுக்கள் பரவத் தொடங் கின. அதன் பிறகுதான் காதல் வயப்பட்டோம் என்றார்.’
அமலாபால் கூறும் போது, ’திருமணத்துக்கு பிறகு நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்’ என்றார்..

Comments