தமிழ் சினிமாவில் ஹன்சிகாவின் மார்க்கெட் உச்சத்தில்: சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தினார்!!!

19th of May 2014
சென்னை::தமிழ் சினிமாவில் ஹன்சிகாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் சிம்புவின் காதல் வலையில் விழுந்ததால், அவரது மார்க்கெட் ஏறின வேகத்திலேயே இறங்கியது. அதனால் சில படங்களில் கொடுத்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடித்து வந்த ஹன்சிகா, பின்னர் சிம்புவை விட்டு விலகிவிட்டதாக அறிவித்தார்.

அதையடுத்து, தமிழ், தெலுங்கில் சில புதிய படங்களில் கமிட்டாகி மார்க்கெட்டை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட ஹன்சிகா, முதலில் கொடுத்த சம்பளத்தை கண்ணை மூடிக்கொண்டு வாங்கினார். ஆனால் அப்படி ஒரு தெலுங்கு படத்துக்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக பேசி ஒப்பந்தமான ஹன்சிகா, பின்னர் படப்பிடிப்புக்கு சென்ற சில நாட்களிலேயே இப்போது எனது மார்க்கெட் எகிறி விட்டது என்று சொல்லி ஒரு கோடி சம்பளம் கேட்டாராம்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பட தயாரிப்பாளர், சத்தமில்லாமல் ஹன்சிகாவை படத்திலிருந்தே நீக்கி விட்டு இப்போது வேறொரு தெலுங்கு நடிகையை ஒப்பந்தம் செய்து விட்டாராம். இருப்பினும் அசரவில்லை ஹன்சிகா. என் ரேஞ்ச் நடிகைகளான காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா ஆகியோர் ரவுண்டாக ஒரு கோடி வாங்குகிறார்கள். அப்படியிருக்கிறப்ப நான் மட்டும் எப்படி 50 லட்சத்துக்கு நடிப்பது என்ற சொல்லிக்கொண்டு புதிய படங்களுக்கு தன்னை ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் கதையை கேட்பதற்கு முன்பே ஒரு கோடிக்கு ஓகேன்னா கதை சொல்லுங்கள். இல்லை வந்த வழியே போய் விடுங்கள் என்று கறாலாக பேசிக்கொண்டிருக்கிறார்.

ஹன்சிகாவின் இந்த கறார் பேச்சு ஒர்க் அவுட்டாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

Comments