விக்ரமின் ‘இடம் மாறி இறங்கியவன்’ பட படப்பிடிப்பு துவங்கியது!!!

26th of May 2014
சென்னை::
கோலி சோடா வெற்றிக்குப் பிறகு விஜய் மில்டன் தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார் என்பதை அனைவரும் அறிவர்.
இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கின்றன. இந்தப் படத்திற்கு ‘இடம் மாறி இறங்கியவன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
விக்ரமுக்கு ஜோடியாக இதில் சமந்தா நடிக்கிறார். இசையமைக்கிறார் டி.இமான். இது ஒரு ‘த்ரில்லர் ரோட் மூவி’ என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. ஷங்கரின் ‘ஐ’ படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படம் இது.
விஜய், சூர்யா என தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சமந்தா, இப்படத்தின் மூலம் விக்ரமுக்கும் ஜோடியாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது...

Comments