விஷாலுடன் இணையும் சுந்தர். சி ? இது நியாயமா? சுந்தர்.சி – விஷால்

28th of May 2014
சென்னை::தற்போது தான் இயக்கிக்கொண்டிருக்கும் "அரண்மனை", படத்திற்கு பின் விஷாலுடன் இணைகிறார் இயக்குனர் சுந்தர். சி என்ற வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன.

இதற்க்கு முன் இவர்கள் இணைந்த "மத கஜ ராஜா" படம் இன்னும் வெளியாகவில்லை என்பது முக்கிய குறிப்பு. மத கஜ ராஜா படத்தில் அஞ்சலி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்த செய்து உண்மையா என்னவென்று இன்னும் தெளிவான விளக்கம் வராத நிலையில் தனது அரண்மனை படத்தின் வேலைகளில் பிசியாக உள்ளார் இயக்குனர் சுந்தர். சி.

அப்படி இவர்கள் இணைந்தால், விஷால் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் "பூஜை" படத்திற்கு பிறகு இப்படம் தொடங்கும் என நம்பலாம்...
 
இது நியாயமா? சுந்தர்.சி – விஷால்!!!
 
நான் சிகப்பு மனிதன் படத்தையடுத்து விஷால் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதையடுத்து சுந்தர்.சியுடன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக சுந்தர்.சி, விஷால் இணைந்து நடித்த மதகஜராஜா படமே இன்னும் வெளிவராத நிலையில் மீண்டும் இருவரும் அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகின்றனர்.
இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

Comments