நாயகியாக 10ஆண்டுகளை நிறைவு செய்த திரிஷா!!!

8th of May 2014சென்னை::கடந்த சில ஆண்டுகளாக விருந்துகள் வைப்பதையும், விருந்துகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்து வந்த நடிகை திரிஷா, தற்போது தனது பிறந்தநாளை முன்னிட்டி சக நடிகைகளுக்கு விருந்து வைத்துள்ளார்.

வெளியூர் படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்த திரிஷா, தனது வீட்டில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகைகளுக்கு விருந்து வைத்தார். இதில் நடிகைகள் நயன்தாரா, அமலாபால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

ஜெயம் ரவியுடன் திரிஷா நடித்துள்ள 'பூலோகம்' படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தாமியுள்ள திரிஷா, திரைத்துறையில் கதாநாயகியாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதுடன், இன்னமும் தொடர்ந்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது...
  

Comments