நடிகர் ஜெய் உடன் புதிய படத்தில் இணையும் நடிகை ஆண்ட்ரியா!!!

18th of April 2014
சென்னை::நடிகை ஆண்ட்ரியா விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  மேலும், அரண்மனை மற்றும் தரமணி ஆகிய திரைப்படங்களும் அவரது கைவசம் உள்ளன.  இந்நிலையில், அவர் நடிகர் ஜெய் உடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார்.  எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நகரத்து பெண்மணியாக நடிக்கிறார்.  இது குறித்து இயக்குனர் சரவணன் கூறும்போது, படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.  நகரத்து கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் ரசிகர்கள் அவரை ஸ்டைலிஷ் ஆன பெண்ணாக பார்ப்பார்கள்.
காதல் மற்றும் அதிரடி காட்சிகள் நிறைந்ததாக படம் இருக்கும் என்று கூறியுள்ளார்.  முன்னதாக, நடிகர் ஜெய் உடன் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தது போன்று நடிகை அஞ்சலி நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து சரவணன் கூறுகையில், எனது முதல் படத்தை போன்று இல்லாமல் இந்த படம் இருக்க வேண்டும் என்பதில் நான் மிக கவனமாக இருந்தேன்.  எனவே, இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை அஞ்சலியை அணுக கூடவில்லை.  நடிகை ஆண்ட்ரியாவை கருத்தில் கொண்டே இந்த படத்தின் கதையை நான் எழுதினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு 'சூதுகவ்வும்' பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறாராம். படத்திற்கு 'வலியவன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாம்.

ஆக்‌ஷன் கலந்த ரொமான்ஸ் கதையாக உருவாகப்போகிறதாம் 'வலியவன்'. ஜெய் நடிப்பில் 'திருமணம் எனும் நிக்காஹ்', 'வடகறி' என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்குக் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments