ஹன்சிகாவிடம் ரசிகர்கள் அத்துமீறல் : கோவாவில் பரபரப்பு!!!

18th of April 2014
சென்னை::கோவா கடற்கரையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகை ஹன்சிகாவிடம் ரசிகர்கள் அத்துமீறி நடந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை ஜெயப்பிரதா தனது மகன் சித்தார்த்தை வைத்து 'உயிரே உயிரே' என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் காட்சி கோவா கடற்கரையில் படமாக்கப்பட்டது. இதில் ஹன்சிகா, சித்தார் இருவரும் பங்கேற்றனர். மாலை 4 மணி அளவில் இந்த காட்சி படமாக்கப்பட்டது. இதனை பார்க்க கடற்கரையில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.

கடற்கரையில் கூடியிருந்த ரசிகர்கள் ஹன்சிகா ஹன்சிகா என்று அவரது பெயரை கூப்பிட ஆரம்பித்தனர். மேலும் தங்கள் செல்போன்களில் ஹன்சிகாவை புகைப்படம் எடுத்தனர். திடீர் என்று ரசிகர்கள் கூட்டமாக அங்கு இருந்த பாதுகாவலர்களையும் மீறி ஹன்சிகாவின் அருகில் வந்தனர் அபபோது அவர்கள் ஹன்சிகாவிடம் ஆட்டோகிராப் கேட்டனர். ஆர்வக் கோளாறில் சில ரசிகர்கள் ஹன்சிகாவின் கையை பிடித்து இழுத்தனராம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹன்சிகாவை  பாதுகாவலர்கள் மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், "நான் உயிரே உயிரே படப்பிடிப்பில் இருந்தபோது ரசிகர்கள் கூட்டம் கூடியது. நான் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருவதால் அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியாது என்று நினைத்தேன். ஆனால் என்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்த அவர்கள் அடையாளம் கண்டு என் பெயரைச் சொல்லி அழைத்தனர்." என்றார்.

ரசிகர்களின் இந்த செயலால், அன்றைய தினம் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் படப்பிடிப்பும் வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாம்.
 

Comments