ரஜினிக்கு மிகவும் பிடிச்ச பன்ச் டயலாக்!!!!

14th of April 2014
சென்னை::
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை பார்த்து ரசிக்காமல் இருக்கவே முடியாது. அவரது ஸ்டைல் மட்டுமல்ல அவர் படத்தில் பேசும் பன்ச் டயலாக் கூட ரசிகர்களுக்கு வேத மந்திரம்.

குறிப்பாக ‘நான் ஒருதடவை சொன்னா… நூறு தடவை சொன்ன மாதிரி…’‘என் வழி தனி வழி’ ‘கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்களா தான் வரும்‘…போன்ற வசனங்கள் ரசிகர்களுக்கு பிடித்தமானவை. ஆனால் ரஜினிக்கு மிகவும் பிடித்த பன்ச் டயலாக் என்றால் அது
 
16 வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த போது சொன்ன ‘இது எப்படி இருக்கு? என்கிற டயலாக் தானாம். இதனை அவரே தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த போட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த டயலாக் பேசப்பட்டு கிட்டதட்ட 40 வருடங்கள் எட்டப்போகிறது. இடையில் ரஜினி தனது படங்களில் எத்தனையோ பன்ச் டயலாக் பேசிவிட்டார். ஆனாலும் ரஜினிக்கு ஹீரோவாக பேசிய பன்ஞ் டயலாக்கை விட வில்லனாக பேசிய பன்ச்தான் மிகவும் பிடித்திருக்கிறதாம் ‘இது எப்படி இருக்கு?.

Comments