மீண்டும் சென்னைக்கு திரும்பும் கத்தி!!!

5th of April 2014
சென்னை::விஜய், சமந்தா, சதீஷ், மற்றும் பலர் நடிக்கும் படம் கத்தி. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.
அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது படக்குழு ஐதராபாத்தில் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அது முடிந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த இருக்கிறார்கள். வருகிற 7ம் தேதி துவங்கும் இந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு மாதம் காலம் தொடர்ந்து நடைபெறுமாம்.
 
இதுவரை படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டாம்.  கொல்கத்தா சென்னை, ஐதராபாத், ராஜமுந்திரி என பெரிய நகரங்களை குறி வைத்தே கத்தி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.....

Comments