நாய் குட்டிகளுக்கு திரிஷா பெயர் வைத்தனர் அவரது தோழிகள்!!!

17th of April 2014
சென்னை::நாய் குட்டிகளுக்கு திரிஷா பெயர் வைத்தனர் அவரது தோழிகள்.செல்லப்பிராணிகளான நாய்கள் மீது அன்பு கொண்டவர் திரிஷா. அனாதையாக ரோட்டில் தவிக்கும் நாய்குட்டிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், நாய்களுக்கான சேவை அமைப்பான ‘பிட்டாவில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
 
சமீபத்தில் இவரிடமிருந்து 2 நாய்குட்டிகளை அவரது தோழிகள் தங்கள் வீட்டில் வைத்து வளர்ப்பதற்காக எடுத்துச் சென்றனர். திரிஷாவிடம் இருந்து அந்த நாய் குட்டிகளை வாங்கியதால் அவைகளுக்கு ‘திரிஷ்‘ என்று செல்லப்பெயர் வைத்தனர்.இதையறிந்த திரிஷா, தோழிகளுக்கு நன்றி கூறினார்.
 
இதுபற்றி தனது இணைய தள பக்கத்தில் அவர்,‘எனது 2 தோழிகள் தாங்கள் தத்தெடுத்த 2 நாய்குட்டிகளுக்கு திரிஷ் என பெயர் சூட்டி உள்ளனர். விரைவில் இதேபோன்று இன்னும் ஏராளமான நாய் குட்டிகளுக்கு என் பெயர் வைப்பார்கள் என்று எண்ணுகிறேன். இது எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Comments