தனுஷின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த்!!!

10th of April 2014
சென்னை::அப்பாவை வைத்து 'கோச்சடையான்' படத்தை இயக்கி முடித்துள்ள ரஜினிகாந்தின் இளையமகள், வரும் மே 9ஆம் தேதியன்று கோச்சடையான் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர நிகழ்ச்சி ஒன்று மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட செளந்தர்யா, ரஜினிகாந்தை வைத்து ராணா படத்தை இயக்குவேன், என்று கூறினார். மேலும், தனுஷை வைத்து ஒரு படம் இயக்கவும் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

ராஞ்சனா இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பான அம்பிகாபதி படத்தில் தனுஷ் நடிப்பு ரொம்பவே சிறப்பாக இருந்தது. இதையடுத்து அவரை வைத்து ஒரு படம் இயக்க நான் முடிவு செய்தேன். அவருடைய கால்ஷீட்டுக்காக நான் காத்திருக்கிறேன், கால்ஷீட் கிடைத்தால் எங்களுடைய கூட்டணியில் ஒரு படம் உருவாகும், என்றும் தெரிவித்தார்.

செளந்தர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக தனது அக்காவின் கணவரும், நடிகருமான தனுஷை வைத்து ஒரு படம் இயக்க ஆர்வமாக உள்ளார்....
 

Comments