மீண்டும் படத்தில் நடிக்கப் போகும் விஜயகாந்த்!!!!

4th of April 2014
சென்னை::அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு படிப்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார்.

விஜயகாந்த், தனது இளையமகன் சண்முக பாண்டியனை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். 'சகாப்தம்' என்ற படத்தின் மூல்ம சண்முக பாண்டியன் அறிமுகமாகிறார். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் மூலம் சுதிஷ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு தொடங்க உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கப்போகிறார்.

விஜயகாந்த் கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான 'விருதகிரி' என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிப்பதை தவிர்த்து அரசியலில் முழு கவனத்தையும் செலுத்தினார். தற்போது தனது மகனுக்காக நான்கு வருடங்கள் கழித்து அவர் மீண்டும் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....

Comments