தமன்னா, சென்னை - ஐதராபாத் என்று முகாமிட்டு, புதிய படங்களுக்காக தேடுதல் வேட்டையிலும் மும்முரமாகியுள்ளார்!!!

25th of April 2014சென்னை::ஹிம்மத்வாலா' இந்தி படத்திற்கு பின், இரண்டு இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னாவுக்கு, பாலிவுட் சினிமா மீது பெரிய நம்பிக்கை இல்லை. காரணம், அவர் நடிக்கும், அதே படங்களில் பல ஹீரோயின்கள் இருப்பதால், அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லையாம். அதனால், தமன்னாவின் பாலிவுட் ஆர்வம், தற்போது குறைந்துவிட்டது.
 
இதனால், கோலிவுட், டோலிவுட் மீது, மீண்டும் தன் கவனத்தை திருப்பியுள்ள தமன்னா, சென்னை - ஐதராபாத் என்று முகாமிட்டு, புதிய படங்களுக்காக தேடுதல் வேட்டையிலும் மும்முரமாகியுள்ளார். ஹீரோக்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியாக, பிரபலமானவர்களுக்கு,போன் போட்டு நலம் விசாரிக்கிறாராம்.
 

Comments