நாட்டை நல்லவர்கள் ஆட்சி செய்யவேண்டும்: வடிவேலு பேட்டி!!!

25th of April 2014
சென்னை::நாட்டை நல்லவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்று வாக்களித்த பின்பு நடிகர் வடிவேலு கூறினார்.  சென்னை சாலிகிராமம்>>>
நாட்டை நல்லவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்று வாக்களித்த பின்பு நடிகர் வடிவேலு கூறினார்.  சென்னை சாலிகிராமம் காவேரி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் நேற்று மாலை நடிகர் வடிவேலு வாக்களித்தார்.
 
பின்னர், வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த முறை நான் வாக்களிக்க வேறுமாதிரி வந்தேன். இந்த முறை ஒரு நடிகனாக, பொது ஜனமாக மக்களோடு மக்களாக வாக்களிக்க வந்துள்ளேன். எது எப்படி இருந்தாலும், நாட்டை நல்லவர்கள் ஆட்சி செய்ய வேண்டும். மனசாட்சி படி யாருக்கு போட வேண்டுமோ அவர்களுக்கு போட்டேன்.
 
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து, நான் நடித்து வெளிவந்துள்ள தெனாலிராமன் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வாக்களிப்பது ஜனநாயக கடமை. அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு நடிகர் வடிவேலு கூறினார்.
 

Comments