மீண்டும் சரித்திர நாயகனாக மம்முட்டி..?!!!!

1st of April 2014
சென்னை::
மலையாள திரையுலகில் சரித்திர நாயகர்களை படமாக்குவதில் தனி ஆர்வம் காட்டும் பலர் இருக்கிறார்கள். சொல்லப்போனால் மிகப்பெரிய எழுத்தாளர்களால் பல சரித்திர நாயகர்களின் வரலாறு ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டு விட்டன. அவற்றை படமாக்க வேண்டியதுதான் பாக்கி. அப்படி ஒரு வரலாற்று நயாகன் தான் சேரன் பெருமாள்.

சேரமன்னனான இவரைப்பற்றி தயாராகியுள்ள கதையில் மம்முட்டி நடிப்பார் என்று தெரிகிறது. இதுபற்றி தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள மம்முட்டி புதிய இயக்குனர் ஒருவர் சேரமான் பெருமாளின் கதையுடன் தன்னை வந்து அணுகியதாக கூறியுள்ளார்.
 
ஏற்கனவே ‘ஒரு வடக்கன் வீரகதா’ மற்றும் ‘பழசிராஜா’ படங்களின் மூலம் தனது நடிப்பால் வரலாற்றுக்கு உயிர்கொடுத்த ம்ம்முட்டிதான் இந்தக்கதைக்கும் சரியானவர் என்றே தோன்றுகிறது..

Comments