ஐரோப்பிய நாடுகளில் ஜெய்ஹிந்த் - 2!!!


11th of April 2014
சென்னை::ஸ்ரீராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ‘ஜெய்ஹிந்த் -2’. கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்க, இன்னொரு கதாநாயகியாக மும்பையைச் சேர்ந்த புதுமுகம் சிம்ரன்கபூர் அறிமுகமாகிறார்.
இப்படம் படம் பற்றி இயக்குனர் அர்ஜுன் பேசியபோது,

‘‘ஒரு நாடு வல்லரசு நாடாக மாறவேண்டுமானால் பணபலம், படைபலம் அவசியம். ஆனால் அவற்றை மீறிய ஒரு விஷயம் என்னவாக இருக்கும் என்றால் அது கல்விதான். நல்ல அறிவாளிகள் இருந்தால் நாட்டை மேம்பட வளர செய்வார்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி வருகிறோம். சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் நானும் கதாநாயகி சிம்ரன் கபூரும் பங்கேற்ற சேசிங் காட்சிகளை ஹைவே ரோட்டில் படமாக்கினோம். படு த்ரில்லிங்கான காட்சிகள் ஸ்டன்ட் கலைஞர்களுடன் படமாக்கப் பட்டது.

உலகத்தில் உள்ள எல்லா விதமான மரம், செடி, கொடிகள் அனைத்தும் ஒரே இடத்தில் வளர்க்கிற இடம் சிங்கப்பூரில் உள்ள ‘கார்டன் பை தி வே’ . இங்கு இதுவரை யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை. இந்த இடத்தில் ‘இவன் யார்? இவன் நெருப்பானவன்...’ என்ற பாடல் காட்சியை நானும் சிம்ரன்கபூரும் பங்கேற்க படமாக்கினோம். படத்தின் 95 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் தான் பாக்கி .விரைவில் படத்தை திரையிட உள்ளோம்’’ என்றார்...
 

Comments