நஸ்ரியா நடிக்க தடை:வருங்கால கணவர் அதிரடி!!!

28th of March 2014சென்னை::நடிகை நஸ்­ரியா, தமிழில், நம்பர் 1 இடத்தை, விரைவில் எட்­டிப்­பி­டித்து விடுவார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நேரத்தில், 'நையாண்டி படத்தின் தொப்புள் சர்ச்­சையில் சிக்கி, மார்க்­கெட்டை சரித்துக் கொண்டார். திடீ­ரென, மலை­யாள இயக்­குனர் பாசிலின் மகன், பஹத் பாசி­லுக்கும், நஸ்­ரி­யா­வுக்கும், திரு­மணம் நிச்­ச­யிக்­கப்­பட்­டது.
 
ஆனாலும், நஸ்­ரியா, தொடர்ந்து நடித்து வந்தார். 'திரு­ம­ணத்­திற்கு பின்னும், தொடர்ந்து நடிப்பேன்' என்று தெரி­­­­வித்தார். சமீ­பத்தில் நஸ்­ரி­யாவை சந்­தித்த பஹத் ­பாசில், தொடர்ந்து சினி­மாவில் நடிக்க, அவ­ருக்கு தடை போட்டு விட்­டாராம். அதனால், இது­வரை, 'பஹத் வீட்டில், என் நடிப்­புக்கு யாரும் தடை போட­வில்லை என கூறி, புதிய படங்­களில் நடிக்க கதை கேட்டு வந்த நஸ்­ரியா, திடீ­ரென, புதி­தாக ஒப்­பந்­த­மான படங்­களில் இருந்து வில­கி­யுள்ளார்...

Comments