வழக்கு நடிகைக்கு அம்மா விருது!!!

27th of February 2014
சென்னை::தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு, திரையுலகினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். அதில் ஒன்று தான் 'அம்மா யங் இந்தியா அவார்ட்' (Amma Young India Award).

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி சென்னை, ஆந்திரா கிளப்பில் நடைபெற்ற இவ்விருது வாழங்கும் விழாவையும், இந்த விருதையும், தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி ஏற்பாடு செய்திருந்தார்.

சினிமா, ஊடகம், விளையாட்டு ஆகிய துறைகளில் சாதனைப் படைத்த இளம்பெண்களுக்கு வழங்கப்பட்ட இவ்விருது வழங்கும் விழாவில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கேயார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

இதில் திரைத்துறை சார்பில், வழக்கு எண் 9/18 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான மனிஷா யாதவ் மற்றும் சதா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் பி.வி.சிந்துவுக்கு வழங்கப்பட்டது. ஊகத்துறை சார்பில், திவிய தர்ஷனி, பிரமீலா, ஸ்ரீசா ரெட்டி, சந்தியா, வசுந்தரா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
tamil matrimony_HOME_468x60.gif 

Comments