சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு விடைகொடுக்கிறார்: புது கெட்-அப்பில் அஜீத்!!!

10th of February 2014சென்னை::ஒரு காலத்தில் ரொம்ப யூத்தாக காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருந்த அஜீத் திடீரென்று வெயிட் போட்டு குண்டானார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் காரணமாக அவரது உடலில் 24 இடங்களில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அதற்காக சாப்பிட்ட மாத்திரை மருந்துகளால் உடல் குண்டானது. அதன் பிறகு உடம்மை குறைத்தே தீருவது என்று கருதி ஒரு வருடம் கடுமையான உடற்பயிற்சி, டயட்டில் இருந்து உடம்மை குறைத்தார். திருப்பதி படத்தில் அவர் நடித்தபோது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்திருந்தார். அஜீத்தின் இந்த புதிய தோற்றம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே நார்மல் தோற்றத்துக்கு மீண்டும் வந்தார்.
அதன்பிறகு எந்த இமேஜும் பார்க்காமல் தனது நடுத்தர வயது தோற்றத்தை வெளிப்படுத்தினார். ரஜினிக்கு அடுத்து தோற்றத்தின் இமேஜ் பற்றி கவலைப்படடாத நட்சத்திரமாக அஜீத் கருதப்படுகிறார். ஆங்காங்கே நரைத்த முடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அதுவே ஒரு அழகாக இருந்தது. அதனால் டைரக்டர் வெங்கட்பிரபு அவரை அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மங்காத்தா படத்தில் நடிக்க வைத்தார். அதுவும் நெகட்டிவ் கேரக்டரில். அடுத்து ஆரம்பம் படத்திலும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை பயன்படுத்திக் கொண்டார் விஷ்ணுவர்த்தன். இரண்டுமே ஹிட் என்பதால் அடுத்து வீரம் படத்திலும் அதே லுக்கில் வில்லேஜ் கெட்-அப்பாக மாற்றினார் சிவா.
அடுத்து அஜீத் நடிக்கப்போவது கௌதம் மேனன் படத்தில். கௌதம் மேனனுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்க்க அஜீத்தே வழிய வந்து அவர் படத்தில் நடிக்க இருக்கிறார். "எனக்காக பிரஷ்சா ஒரு கதை ரெடிபண்ணுங்க எல்லா பிரச்சினையையும் தீர்த்துவிடலாம்" என்று கௌதமுக்கு அஜீத் நம்பிக்கையூட்ட பக்காவான ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி அஜீத்திடம் காட்டி அதற்கு ஓகேவும் வாங்கி விட்டார்.
பொதுவாக கௌதம் மேனன் ஹீரோக்களை அழகாகவே காட்டுவார். அவர் அஜீத்தை இதுவரை இல்லாத அளவிற்கு அழகான புதிய தோற்றத்தில் காட்ட இருக்கிறார். முதல் கட்டமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் அகற்றப்பட்டு விட்டது. இணையதளத்திலிருந்தும், பிரபல ஓவியர்களை கொண்டும் பல வித தோற்றங்களை பிரதியெடுத்து அதில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து அஜீத்திடம்
 
கொடுத்துள்ளார். அதில் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார் அஜீத். இப்போது அந்த தோற்றத்திற்கு மாறி வருகிறார். அதனால் நண்பர்களை சந்திப்பது பொது இடத்தில் தோன்றுதை தவிர்த்து வருகிறார். அனேகமாக கௌதம் மேன்ன படம் முடியும் வரை வெளியில் வரமாட்டார் என்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடியும் வரை அஜீத்தின் தோற்றம் பற்றியும், கதை பற்றியும் ரகசியம் காக்க முடிவு செய்திருக்கிறார்கள்.::
tamil matrimony_HOME_468x60.gif

Comments