கடும்குளிரிலும் மொராக்கோவில் டூயட் பாடிய ஜீவா-துளசி!!!

17th of February 2014
சென்னை::ஜீவா, துளசி நாயர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘யான்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பை சமீபத்தில் மொராக்காவில் படமாக்கி உள்ளனர். 3 வாரங்கள் அங்கு தங்கி படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினர், இதுவரை கண்டிராத வகையில் இந்த வருடம் பெய்த கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல், சண்டைக் காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் படமாக்கி உள்ளனர்.

இவ்வளவு வேகத்தில் படப்பிடிப்பை நடத்திய ரவி.கே.சந்திரனின் வேகத்தையும், படமாக்கும் நேர்த்தியையும் உலகத்தரம் வாய்ந்த படங்களில் பணியாற்றிய மொராக்கோ நாட்டு படக்குழுவினர் பாராட்டியுள்ளனர். இது இந்திய திரைப்படங்களின் மேல் உள்ள மரியாதை அடையாளம் காட்டியது. காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் கோடை விருந்தாக வெளிவர இருக்கிறது.
      
tamil matrimony_HOME_468x60.gif

Comments