வைரமுத்துவுக்கு பிடித்த யுவன் பாடல்கள்!!!

1st of February 2014
சென்னை::சீனுராமசாமி இயக்கும் படம் ‘இடம் பொருள் ஏவல்’. இந்தப் படத்தில் கவிஞர் வைரமுத்துவும், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் இணையும் முதல் படம் ’இடம் பொருள் ஏவல்’ என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கம்!
 
இந்நிலையில், யுவன் இசை அமைத்த பாடல்களில் ’நந்தா’ படத்தில் வரும் ‘முன்பனியா… முதல் மழையா…’ பாடலும், சமீபத்தில் திரைக்கு வந்த, ‘தங்கமீன்கள்’ படத்தில் இடம்பெற்ற, ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ பாடலும் தான் தனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்கள் என்று கூறியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து!

இளையராஜா இசையில் வைரமுத்து பாடல் எழுதி 28 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இளையராஜாவின் வாரிசான யுவனின் இசையில் வைரமுத்து பாடல் எழுதுவது மகிழ்ச்சியை தரும் விஷயமாகும்!
::
tamil matrimony_HOME_468x60.gif 

Comments