செல்லப்பிராணி வளர்ப்பு த்ரிஷா வழியை பின்பற்றும் எமி

26th of January 2014சென்னை::செல்லப்பிராணிகள் அமைப்பின் தூதர் ஆனார் எமி ஜாக்ஸன்.நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை அன்பு காட்டி வளர்க்கிறார் த்ரிஷா. அத்துடன் விலங்குகள் காப்பகமான பீட்டா அமைப்பில் இணைந்து சேவை செய்து வருகிறார்.
 
தற்போது, பீட்டா அமைப்புக்கு தூதராக நடிகை எமி ஜாக்ஸன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ‘மதராச பட்டணம்’ படத்தில் அறிமுகமானதுடன் ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.விலங்குகள் அமைப்பின் தூதராக ஆனது பற்றி எமி கூறும்போது, ‘விலங்குகளை சாலைகளில் அனாதையாக திரிய விடுவதை இத்துடன் நிறுத்தி கொள்வோம். அவற்றின் உயிரை காப்பாற்றவும், பாதுகாக்கவும் உங்கள் மனங்களையும், வீடுகளையும் திறந்து வையுங்கள்.
 
ஷாப்களுக்கு சென்று செல்லப்பிராணிகளை விலை கொடுத்து வாங்கி வளர்க்காமல், அனாதையாக திரியும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்று பிரசாரம் செய்யப் போகிறேன். பீட்டா அமைப்பின் தூதராக அறிவிக்கப்பட்டதற்கு சந்தோஷப்படுகிறேன்‘ என்றார். ::
tamil matrimony_HOME_468x60.gif

Comments