இசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார்!!!

15th of January 2014
சென்னை::
படத்திற்கு இசையமைக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டு, தற்போது மறுப்பு தெரிவிப்பதாக கூறி, இசையமைப்பாளர் அனிருத் மீது, தயாரிப்பாளர் ஒருவர் தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார் அளித்துள்ளார்.

'3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள அனிருத், முன்னணி ஹீரோ, இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், 'வாயை மூடி பேசவும்' என்ற படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டு அட்வான்ஸ் வாங்கி விட்டு பிறகு இசையமைக்க மறுத்துவிட்டதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது குறித்து அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் அனிருத்துக்கு எதிராக புகார் அளித்துள்லார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

வாயை மூடி பேசவும் படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தோம். இதற்காக அவருக்கு ரூ.5 லட்சம் அட்வான்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஒப்புக் கொண்டபடி படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை. இதனால் அனிருத்துக்கு பதில் ஷான் ராகவேந்திரா இசையமைத்தார்.

எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் அனிருத் திருப்பி தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments