சிம்புவுக்கு பவர்புல் கேரக்டர் உருவாக்குங்கள்: கவுதம் மேனனுக்கு அஜீத் உத்தரவு!!!

27th of January 2014
சென்னை::வீரம் வெற்றிக்குப் பிறகு அஜீத், கவுதம் மேனன் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது. தற்போது சிம்புவை வைத்து குறுகியகால தயாரிப்பாக ஒரு படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கும் கவுதம் அதை முடித்து விட்டு அஜீத் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்தப் படத்தில் அஜீத்துடன், சிம்புவும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்புவை அஜீத்துக்கு ரொம்பவும் பிடிக்கும்.

சமீபத்தில்கூட தி.மு.கவில் டி.ராஜேந்தர் சேர்ந்த செய்தி கேள்விப்பட்டு சிம்புவுடன் பேசிய அஜீத். உங்க படத்துக்கு பொலிட்டிக்கல் பிரஷர் எதுவும் வராம கவனமா பார்த்துக்குங்கன்னு அட்வைஸ் பண்ணினாராம். இப்போது ஆரம்பத்தில் ஆர்யா, வீரத்தில் விதார்த்துக்கு வாய்ப்பு கொடுத்ததைப்போல அடுத்த படத்தில் சிம்புவுக்கு கொடுக்கப் போகிறார். அவருக்கு ஒரு பவர்புல் கேரக்டரை உருவாக்குமாறு கவுதம் மேனனுக்கு உத்தரவிட்டிருக்கிறார். சிம்புவின் நண்பரான கவுதம் மேனனும் உற்சாகத்தோடு களத்தில் இறங்கிவிட்டார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments