நயன்தாரா கட்டிப்பிடித்து அழவில்லை’ - சத்யராஜ் வருத்தம்!!!

8th of January 2014
சென்னை::இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ் “கேரக்டர் ரோல் மட்டும் வருவதால் இனி ஹீரோவாக நடிக்க முடியாது என்று தெரிந்துவிட்டது.
 
தற்போது தமிழ் சினிமாவின் அழகான ஹீரோயின்களின் தந்தை நான் தான். சமீபத்தில் நான் நடித்த ராஜா ராணி திரைப்படத்தில் காரில் என்னை காரின் ஒரு சீட்டில் அழ வைத்துவிட்டு, பக்கத்து சீட்டில் நயன்தாரா அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார். அதுபோன்ற காட்சிகளில் ஓடிவந்து கட்டிப்பிடித்து அழவேண்டாமா?” என்றார்.
 
மேலும் அவர், ”சரி தமிழில் தான் இப்படி என்று தெலுங்கில் பல படங்களில் பிசியானேன். கோபிசந்துடன் நடிக்கும் படத்தில் த்ரிஷாவும் நடிக்கிறார். அந்த ஷூட்டிங்கிலும் த்ரிஷா என்னிடம் ’மாமகாரு’ என வசனம் பேச ஆரம்பித்ததும் எல்லாம் முடிந்துவிட்டது எனத் தெரிந்துவிட்டது” என்று கலகலப்பாக பேசினார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments