சம்பளத்தில் 85 லட்சத்தை திருப்பிக்கொடுத்த விமல்!!!


8th of January 2014சென்னை::கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனீஷா என பல நடிகர்கள் சேர்ந்து நடித்தப் படம் ஜன்னல் ஓரம். இப்போதுள்ள சினிமா சூழலில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்கள் கிடைப்பதால் மற்ற படங்களை வெளியிடுவதில் தயாரிப்பாளர்களுக்கு பெரிய கஷ்டம் இருக்கிறது. 
 
ஜன்னல் ஓரம் படத்தை வெளியிட முடியாமல் அதன் தயாரிப்பாளருக்கு தன் சம்பளத் தொகையில் இருந்து 85 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறார் நடிகர் விமல். சமீபத்தில் புலிவால் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய பிரசன்னா விமலின் பெருந்தன்மையை குறிப்பிட்டு பேசினார். விமல் - பிரசன்னா இருவரும் சேர்ந்து நடித்தப் படம் புலிவால். 
 
மேலும் பேசிய பிரசன்னா, நானாக இருந்தால் கண்டிப்பாக கொடுத்திருக்க மாட்டேன். கிட்டத்தட்ட ‘ஜன்னல் ஓரம்’ படத்தில் அவர் இலவசமாக நடித்தார் என்று தான் சொல்ல முடியும்.  சினிமாவில் விமல் எனக்கு ஜுனியர் என்றாலும் அவரிடம் நான் நிறைய பன்புகளை கற்றுக்கொண்டேன் என்றார். 
 
அவருக்கு நிறைய சம்பளம் கொடுக்குறாங்க... அவர் திருப்பிக் கொடுகிறார். எனக்கு எங்க அவ்வளவு சம்பளம் கொடுக்குறாங்க என்றும் புலம்பினார். விமலின் பெருந்தன்மை பார்த்து திரைத்துறையினர் வியக்கிறார்கள். 

tamil matrimony_HOME_468x60.gif
 

Comments