27th of January 2014
சென்னை::
ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் வாணி கபூர். அவர் இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். அது என்ன என்பதைப் பற்றி அவரே சொல்கிறார். சென்ற ஆண்டுக்கான சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளேன். சுத்தேசி ரொமான்ஸ் படத்துக்காக இது கிடைத்துள்ளது. இது எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகும். அடுத்து எனக்கு சிம்ரன் மொளகா பஜ்ஜி என்று செல்லப்பெயர் சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பது என் ஆசை. குறிப்பாக அஜீத், விஜய்யுடன் நடிக்க வேண்டும். அதற்காக இப்போதே தனியாக ஆசிரியர் வைத்து தீவிரமாக தமிழ் கற்று வருகிறேன். அடுத்த படத்திற்குள் தமிழ் கற்று விடுவேன். மூன்றாவது படத்தில் நானே டப்பிங்கும் பேசிவிடுவேன். அந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனது குழுவினரோடு ஆஹா கல்யாணம் படத்தை பார்த்தேன். சூப்பரா வந்திருக்கு. எனக்கு பிடிச்சது மாதிரியே ஆடியன்சுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். என்கிறார் வாணி கபூர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments