நயன்தாரா - ஜெயம் ரவி ஜோடிக்காக உருவாக்கப்பட்ட ரயில் நிலையம்!!!

5th of December 2013
சென்னை::காதல் கசந்ததால், தற்போது படங்கள் நடிப்பதில் முக்கியத்துவம் கொடுத்துவரும் நயன் தாரா,

அந்த வகையில், நயன் தாரா முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேருகிறார். இந்த ஜோடிகளை ஜெயம் ரவியின் அண்ணனான இயக்குநர் ஜெயம் ராஜா இயக்குகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்குகிறது.

ரீமேக் இயக்குநர் என்று பெயர் எடுத்த ஜெயம் ராஜா, இப்படத்தின் கதையை அவரே எழுதியுள்ளார் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்காக, சென்னை மீனாம்பாக்கம் எதிரே உள்ள ஒரு தொழிற்சாலையில் ரயில் நிலையம் செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டில் தான் நாளை படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் நயன்தாராவும், ஜெயம் ரவியும் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
 
வரும் வாய்ப்புகளுக்கு பல்வேறு கெடுபிடிகளை போடுவதை தவிர்த்து விட்டு, கேட்ட பணத்தைக் கொடுத்தால் போதும் என்று ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். சிம்புவுக்கே மீண்டும் ஜோடியாக நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments