நான் ஈ சுதீப் இப்போ பேரரசுவுடன்!!!

10th of December 2013
சென்னை::நான் ஈ படத்தில் நடித்த சுதீப், அதற்கப்புறம் நேரடியாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசைக்கு தீனி போடுகிற மாதிரி பிரபல நட்சத்திர இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவரை சந்தித்தார். இருவரும் சந்திக்க துவங்கிய சில நாட்களிலேயே இருவரும் இணைந்து ஒரு அற்புதமான படத்தை தமிழில் வழங்கப் போவதாக மீடியாக்களில் செய்தி கசிந்தது. இதை கே.எஸ்.ரவிகுமாரும் மறுக்கவில்லை. சுதீப்பும் மறுக்கவில்லை.
 
இந்த நிலையில் சுதீப்பின் தமிழ்ப்பட பிரவேசத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் இங்கே. இவர்களின் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கிற அளவிலேயே முடிந்து போய்விட்டதாகவும் கூறுகிறார்கள். இதற்கிடையில் சுதீப் தமிழில் பேரரசு இயக்கிய சில கமர்ஷியல் படங்களை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டதாம். இவ்வளவு பரபரப்பாக ஒரு படத்தை இயக்கிய இயக்குனர், இப்போது தமிழில் அதிகம் படம் பண்ணுவதில்லையா? ஏன்? அவரது தற்போதைய நிலைமை என்ன? என்றெல்லாம் அடுக்கடுக்காக விசாரித்தவர், பேரரசுவை நேரில் வரழைத்து பேசியதாக கோடம்பாக்கத்தில் தகவல் கசிகிறது. ஆக்ஷன் சுதீப்புக்கு எந்த ஊரை ஒதுக்கி வைத்திருக்கிறாரோ பேரரசு?
tamil matrimony_HOME_468x60.gif

Comments