சிம்புவை அவாய்டு பண்ணும் ஹன்சிகா!!!

11th of December 2013
சென்னை::
சிம்புவை ஹன்சிகா காதலிக்கிறார் என்றதும், இனி அவர் சரிபட்டு வரமாட்டார். காதல் காதல் என்று அதிலேயே பைத்தியமாக சுற்றிக்கொண்டிருப்பார். படப்பிடிப்புக்கு வந்தாலும், போனை காதில் வைத்துக்கொண்டு காதல்மொழி பேசுவதிலேயே நேரத்தை செலவிடுவார் என்றுதான் டைரக்டர்களும், படாதிபதிகளும் ஹன்சிகா மீது அதிருப்தி மனநிலையில் இருந்தனர்.

அவரை ஏற்கனவே புக் பண்ணி படப்பிடிப்பு நடத்தி வந்தவர்களோ, இந்த படத்தோடு அவரை கைகழுவி விட வேண்டும் என்று நினைத்துதான் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். ஆனால், நிலைமையோ தலைகீழாகி விட்டது. அவர்கள் நினைத்த மாதிரி இல்லாமல் எப்போதும் போலவே படப்பிடிப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார் ஹன்சிகா. படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுவது. ஒருநாள்கூட லீவு போடாமல் முழு ஒத்துழைப்பு கொடுப்பது என்ற தனது கொள்கையை சரியாக கடைபிடித்து வந்தார்.

ஹன்சிகாவின் இந்த சின்சியாரிட்டியை பார்த்த படாதிபதிகள் அவரை மீண்டும் மீண்டும் தங்கள் படங்களில நடிக்க புக் பண்ணி வருகின்றனர். இதனால் திருப்திகரமான மனநிலையுடன் ஹன்சிகாவின் மார்க்கெட் சென்று கொண்டிருக்கிறது. அதனால், இந்த பெயரை அப்படியே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஹன்சிகா, தான் நடித்துக்கொண்டிருக்கிற ஸ்பாட்டுக்கு அருகில் எதேச்சையாக சிம்புவும் நடித்துக்கொண்டிருந்தால்கூட அவரை ஒரு எட்டு சென்று பார்ப்பதில்லையாம். அதேபோல் அவரே வருவதாக சொன்னால்கூட ஸ்பாட்டுக்கு வேண்டாம். ஹோட்டலில் வழக்கம்போல் மீட் பண்ணலாம் என்று அவாய்டு பண்ணி விடுகிறாராம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments