தயாரிப்பாளர்களுக்கு நிதி வழங்கினார் விஜய்!!!

20th of December 2013
சென்னை::ஆரம்ப காலத்தில் தன்னை வைத்து படம் தயாரித்த ஐந்து தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியை நடிகர் விஜய் வழங்கினார்.

நடிகர் விஜயின் ஆரம்ப கால படங்கள் பெரும்பாலும் தோல்விப் படங்களாகவே அமைந்தன. இருப்பினும் , தொடர்ந்து  பல படங்களில் நடித்து வந்த அவர்,ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில், விக்ரமன் இயக்கத்தில் வெளியான  'பூவே உனக்காக' என்ற படத்தின் மூலம் வெற்றி ஹீரோவாக உருவெடுத்து, பிறகு தொடர் வெற்றிகளைக் கொடுத்து தற்பொது முன்னணி வசூல் ஹீரோவாக ஜொலிக்கிக்கிறார்.

தன்னை வைத்து ஆரம்ப காலத்தில் படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு எதாவது உதவி செய்ய வேண்ட்டும் என்று நினைத்த விஜய், அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் என்று ஐந்து பெருக்கு கொடுத்துள்ளார்.

இதில், 'வசந்த வாசல்' படத்தை தயாரித்த ராஜாராம், 'ராஜாவின் பார்வையிலே' படத்தை தயாரித்த செளந்தராஜன், 'ஒன்ஸ்மோர்' படத்தை தயாரித்த சி.வி.ராஜேந்த்திரன், 'மின்சாரா கண்ணா' படத்தை தயாரித்த கே.ஆர்.ஜி, 'விஷ்ணு' படத்தை தயாரித்த பாஸ்கர் ஆகிய ஐந்து பேருக்கு இந்த நிதி வசங்கபட்டது.

நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டு ஐந்து தயாரிப்பாளர்களுக்கும் 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும், இதே நிகழ்ச்சயில் விஜய் நடிப்பில் போங்கள் பண்டியன்று வெளியாகவுள்ள 'ஜில்லா' படத்தின் பாடல்களும் வெளியிடப்பட்டன.


tamil matrimony_HOME_468x60.gif

Comments