பார் டான்சராக நமீதா!!!

16th of December 2013
சென்னை::ரசிகர்களை கவர்ச்சி மூலம் கிரங்கடித்த நமீதா இப்போது சின்னத்திரையில் பலர் ஆடும் ஆட்டங்களுக்கு மார்க் போட்டுக்கொண்டிருக்கிறார்.
 
இந்நிலையில் அவரை வெள்ளித்திரையில் மீண்டும் பார்க்க மாட்டோமா என ஏங்கும் ரசிகர்களுக்கு எங்க மருது படம் தீனி போட வருகிறது.
 
இந்தப் படத்தில் நமீதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது பார் டான்சராக, படு கவர்ச்சியாக நடித்திருக்கிறாரம். அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் கலாபவன் மணி நடித்துள்ளார். தாதாவான கலாபவன் மணியின் காதல் லீலைகளும், நமீதாவின் கவர்ச்சி லீலைகளும் ரசிகர்களை குஷிப்படுத்தும் அளவுக்கு படத்தில் நிரம்பி வழிகிறது.
 
மேலும் படத்தில் புதுமுகம் விஜய் ஆனந்த் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக மிதுனா நடித்துள்ளார். இவர்களுடன் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.எம் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
 
ஊருக்காக உழைக்கும் காவல்துறை அதிகாரியின் நேர்மையை பிடிக்காத, சில போலீஸ் அதிகாரிகளே அவரை கொலை செய்து விடுகிறார்கள். ஏன் அப்படி செய்தார்கள் என்பதை மையாமாக வைத்து ஒரு காதல் கலந்த திகில் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆர்.முருகேசன் – பீ.சீத்தாபதி ஆகியோர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரவி ஒளிப்பதிவு செய்ய, ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார்.
 
எஸ்.ஆர்.எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.எம் தயாரித்துள்ளார். சென்னை, ஊட்டி, மதுரை, பாலக்காடு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘எங்க மருது’ படம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments