இனி நான் பர்பாமென்ஸ் நடிகை! சொல்கிறார் ஆண்ட்ரியா!!!

12th of December 2013
சென்னை
::பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. நடிப்பு-இசை என இருவழிப்பாதையில் பயணிக்கும் அவர், விஸ்வருபம் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் எனக்குள் இருந்த அதிகபட்சமான நடிப்பை வெளியே கொண்டு வந்திருக்கிறார் கமல் சார். அதனால், இப்படம் திரைக்கு வரும்போது சராசரி நடிகையாக இல்லாமல் பர்பாமென்ஸ் நடிகையாகி விடுவேன் என்று கூறுகிறார்.

இதற்கிடையே, கற்றது தமிழ் ராம் தங்கமீன்கள் படத்தையடுத்து இயக்கும் தரமணி படத்தில் அழுத்தமான காதல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா. இதுபற்றி அவர் கூறுகையில், என்னை இதுவரை யாரும் பார்க்காத கோணத்தில் பார்த்திருக்கிறார் டைரக்டர் ராம். காதல் கதை என்றாலும் என்னைப்பொறுத்தவரை ரொம்ப ஸ்பெஷல் இந்த படம். அதனால் இந்த படத்தில் நடித்து முடிக்கிற வரை மற்ற படங்களை தள்ளி வைத்திருக்கிறேன் என்று சொல்லும் ஆண்ட்ரியா, இனி என்னை வெயிட்டான கதாபாத்திரங்களுக்கு மட்டுமே இயக்குனர்கள் அழைப்பார்கள் என்கிறார்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments