விமலை விட அதிக சம்பளம் கேட்ட பிரியா ஆனந்த்!!!

30th of December 2013
சென்னை::ஜெயம்கொண்டான் இயக்குனர் கண்ணன் தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் விமல் நடிக்கிறார்.

இதில விமல் ஜோடியாக நடிக்க பிரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரிக்க உள்ளார். இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் படத்தில் விமல் ஜோடியாக நடிப்பதற்கு பிரியா ஆனந்த்திற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அநேகமாக, அவருடைய சம்பளம் விமலுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட அதிகமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இந்த ஆண்டில் விமல் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்த படம்.

அப்படியிருந்தும் அவருடன் ஜோடியாக நடிக்க பிரியா ஆனந்த் இவ்வளவு சம்பளம் கேட்டது ஆச்சரியமாக உள்ளது என திரையுலக நோக்கர்கள் கருதுகிறார்கள்.

tamil matrimony_HOME_468x60.gif

Comments