நயன்தாராவுடன் ஜோடி சேரும் சிம்புநோ பிராப்ளம் என்கிறார் ஹன்சிகா!!!


25th of November 2013
சென்னை::மாஜி காதலர்களான, சிம்புவும், நயன்தாராவும், மீண்டும் ஜோடி சேரவுள்ளதாக வெளியான தகவல், கோலிவுட்டில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தால், சிம்புவின் தற்போதைய காதலியான, ஹன்சிகா, கடுப்பில் இருப்பார் என்று தான், அனைவரும் நினைத்தனர். ஆனால், அவரோ, ரொம்ப கூலாக இருக்கிறாராம்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், கதைக்கு பொருத்தமாக இருப்பதால், மீண்டும், இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதில் என்ன தவறு? தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள், விஷயங்களை, தொழிலில் புகுத்தக் கூடாது.
 
தனிப்பட்ட விஷயங்கள் வேறு; தொழில் வேறு. சிம்புக்கும், எனக்கும் இடையேயான காதல், மிகவும் உறுதியானது. எங்கள் காதலை, யாராலும் முறிக்க முடியாது என, வார்த்தைகளில் உறுதி தெறிக்க கூறுகிறாராம், ஹன்சிகா.  
     tamil matrimony_HOME_468x60.gif
 

Comments