நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு காலமானார்!!!

9th of November 2013
சென்னை::நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு சென்னையில் நேற்று மருத்துவமனையில் மரணமடைந்தார். 
 
5 ஸ்டார்', 'தூள்', 'சிவகாசி', 'திண்டுக்கல் சாரதி', 'மாப்பிள்ளை' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிட்டிபாபுவுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது. இதற்காக அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் படங்களில் நடிக்காமல் வீட்டில் ஓய்வு எடுத்தார்,
 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான சிட்டிபாபு, 2003-ஆம் ஆண்டில் வெளிவந்த "பாய்ஸ்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளிவந்த "தூள்' படம் அவருக்கு திரையுலகில் சிறப்பான இடத்தை தந்தது. தொடர்ந்து "சிவகாசி', "திருத்தணி', "திண்டுக்கல் சாரதி', "மாப்பிள்ளை' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த "மாசாணி' அவர் நடித்து வெளிவந்த கடைசிப் படமாகும்
 
தற்போது அவர் மீண்டும் சில படங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை முகப்பேரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிட்டிபாபு உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றது.
 
இதை அடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்  அங்கு தீவிர சிகிச்சை. பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
நடிகர் சிட்டிபாபுவுக்கு 49 வயதாகிறது. ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments