அரண்மனை படப்பிடிப்பிற்காக ஐதராபாத் பறக்கிறார் ஹன்சிகா!!!

11th of November 2013
சென்னை::அரண்மனை படப்பிடிப்பிற்காக ஐதராபாத் பறக்கிறார் ஹன்சிகா.
தீயா வேலை செய்யணும் குமாரு வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் திரைப்படம் அரண்மனை. இந்தப் படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார். இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்கிறார். சந்திரமுகி போன்று ஆவி படமான இதில் லட்சுமிராய், ஆண்ட்ரியா, ஹன்சிகா என மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள்.
 
இவர்களுடன் முக்கிய வேடத்தில் சந்தானம், நிதின் சத்யாவும் நடிக்கிறார்கள். வில்லன்களாக பருத்திவீரன் சரவணன், ராஜ்கபூர், விச்சு நடிக்க பரத்வாஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சுந்தர்.சியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமார் தான் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சிக்கு ஜோடியாக லட்சுமிராய் நடிக்கிறார். த்ரில்லராக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஹன்ஷிகாவுக்கு சந்திரமுகி ஜோதிகா மாதிரி சவாலான வேடம் என்பதால், இதுவரையிலான தனது நடிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்து வருகிறாராம்.
 
இதன் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஹன்சிகா, தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக ஐதராபாத் பறக்க இருக்கிறார். தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்குகிறார் சுந்தர்.சி.
tamil matrimony_HOME_468x60.gif

Comments