கால்ஷீட் குளறுபடி செய்வதால் ரம்யாவை கடத்தி சென்று ஷூட்டிங் நடத்தலாம் ஹீரோவின் பேச்சால் பரபரப்பு!!!

21st of November 2013
சென்னை::ரம்யா கால்ஷீட் பிரச்னை செய்வதால் அவரை கடத்தி சென்று ஷூட்டிங் நடத்தலாம் என்றார் கன்னட ஹீரோ சிவராஜ்குமார். இதனால் கன்னட சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
கர்நாடகா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரம்யா நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். இதனால் இவர் ஒப்புக்கொண்டிருந்த ‘நீர் டோஸ் உள்ளிட்ட சில கன்னட படங்கள் ஷூட்டிங் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ‘நீர் டோஸ் படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் ரம்யா நடிக்க இருந்தார். அது தனது இமேஜை பாதிக்கும் என்று கூறி நடிக்க மறுத்தார். இதை தயாரிப்பாளர் ஜக்கேஷ் ஏற்கவில்லை. ரம்யா மீது பிலிம்சேம்பரில் புகார் அளித்தார். இருதரப்பினரிடமும் பிலிம்சேம்பர் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டது.
 
ஜனவரி மாதத்துக்குள் படத்தில் நடித்துக் கொடுப்பதாக ரம்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கன்னட பட ஹீரோ சிவராஜ்குமார் நடிக்கும் ‘ஆர்யன் ஷூட்டிங்கில் ரம்யா பங்கேற்றார். ரம்யா கால்ஷீட் கிடைப்பதில் பிரச்னை இருப்பதால் செட்டில் பேசிக்கொண்டிருந்த சிவராஜ்குமார்,‘ரம்யா கால்ஷீட் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இப்போது செட்டுக்கு வந்திருக்கிறார். அவரை தனி விமானத்தில் கடத்தி சென்று எங்கெல்லாம் ஷூட்டிங் நடத்தவேண்டுமோ அங்கு நடத்திவிட்டு திரும்பவும் கொண்டு வந்துவிட்டுவிடலாம் என்று கூறினாராம்.
 
இதை தமாஷா சிவராஜ்குமார் சொன்னதாக பட யூனிட்டார் கூறினாலும் இந்த பேச்சு ரம்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். நடிகையை கடத்தலாம் என ஹீரோவே சொன்னது கன்னட சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                        tamil matrimony_HOME_468x60.gif

Comments