சிம்பு, நயன்தாரா படத்தை வாங்க கடும் போட்டி!!!

26th of November 2013
சென்னை::சிம்பு-நயன்தாரா இணையும் படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்க கடும் போட்டி நிலவுகிறதாம்.
 
வல்லவன் படத்தில் சிம்பு-நயன்தாரா ஜோடி சேர்ந்தபோது, ஆரம்பத்தில் இருந்த நெருக்கத்தை விட போகப்போக காற்று புக முடியாத அளவுக்கு அவர்களின் நெருக்கம் இறுக்கமானது. அ
தையடுத்து யூகங்கள் வெளியாகும் முன்பே, அவர்கள் காதலர்களாகவே தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர்.
 
ஆனால், சிலகாலம் பற்றி எரிந்த அவர்களின் காதல் குறுகிய காலத்திற்குள்ளேயே முறிந்து போனது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அப்போது சொன்னார்கள். இதையடுத்து அவர்கள் ஆளுக்கொரு திசையாக சென்றுவிட்டனர்.
 
இந்நிலையில் பசங்க இயக்குனர் பாண்டிராஜ் சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் நயன்தாரா. காதல் முறிவால் பிரிந்து போன சிம்பு-நயன்தாரா ஜோடி கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் மீண்டும் இணைகிறது. இதன் மூலம் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்துள்ளது.
 
இப்போதே பல ஏரியாக்களுக்கு அட்வான்ஸ் கொடுக்க பலர் முன் வருகிறார்களாம். அது மட்டுமல்ல, படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கவும் கடும் போட்டி நிலவுகிறதாம். பாண்டிராஜ் இயக்கம் ஒரு பக்கம், இளைய மகன் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாவது மறுபக்கம் என படத்தைத் தயாரிக்கும் டி.ராஜேந்தருக்கு இந்த படம் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு ஜாக்பாட் என பேசிக் கொள்கிறார்கள்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments