அஜித் ரசிகர்களால் பயந்துப்போன அக்க்ஷரா!!!

15th of November 2013
சென்னை::அஜித்துடன் 'ஆரம்பம்' படத்தில் நடித்த அக்க்ஷரா, அஜித்தின் ரசிகர்களால் ரொம்பவே பயந்துப் போயிருக்கிறாராம்.

ஆரம்பம் படத்தில் மத்திய அமைச்சரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், ஒரு காட்சியில் அஜீத்தின் கூலிங் கிளாஸை கழற்ற சொல்லுவார். அந்த காட்சியைப் பார்த்த அஜித் ரசிகர்கள் ரொம்பவே கோபப்பட்டு விட்டார்களாம். தனக்கு அந்த காட்சியில் நல்ல பெயர் கிடைத்தாலும், ஒரு நேரத்தில் அஜித் ரசிகர்களைப் பார்த்து தான் பயந்தேப் போய் விட்டேன் என்று கூறும் அக் க்ஷரா, தனது ஆரம்பம் அனுபவத்தை பற்றி கூறியதாவது:

நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை . அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்து கொண்டு இருந்தவள் . என் நல்ல நேரம் அந்த தருணம் என் திரை உலக பயணத்தில் ஆரம்பத்திலே அமைந்தது. அஜீத் சாருடைய ரசிகர்கள் பலம் திரை அரங்கில் அந்த காட்சியை பார்க்கும் போது  தான் தெரிந்தது. பயமாக இருந்தது என்றால் மிகை ஆகாது.  அந்த காட்சியில் நடிக்கும் போதே அஜீத் சார்தான் என்னை தைரிய மூட்டினார். இப்போது எனக்கு இந்த அளவுக்கு நல்ல பெயர் கிட்டி இருப்பதற்கும் அவரே காரணம் . அவர் ஒரு மிக சிறந்த மனிதர் என்பதை அவருடன் பழகிய நாட்களில் புரிந்து கொண்டேன். ஆரம்பம் நாட்களை நான் என்றும் நினைவில் கொள்வேன்.

நான் ஒரு பரத கலைஞர், சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் உண்டு. நாடோடிகள் ஹிந்தி பதிப்பான 'ரங்ரிஷ்' படத்தில்  நடித்து உள்ளேன். எனக்கு பிடித்த நடிகர் ஹாலிவுட்  நடிகர் பிராட்லி கூபர். பிடித்த நடிகை கரீனா கபூர், அவருடைய மெல்லிய இடை வாகும் அவர் தன்னை கட்டு கோப்பாய் வைத்து இருக்கும் அழகையும் நான் என்றுமே ரசிப்பவள். விளையாட்டு துறையில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. நான் தேசிய அளவில் கை பந்து போட்டியில் கலந்து கொண்டவள். விளையாட்டு துறையில் உள்ளதனாலோ   என்னவோ எனக்கு மன உறுதியும் திடமும் அதிகம். அந்த உறுதியோடு தமிழ் திரை உலகில் ஒரு நிரந்தரமான முக்கிய இடத்தை பிடிப்பேன்.

இவ்வாறு அக் க்ஷரா கூறினார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments