அஞ்­சலி ரசி­கர்­க­ளுக்கு சந்­தோ­ஷ­மான செய்தி!!!

9th of October 2013
சென்னை::சித்­தி­யுடன் கோபித்துக் கொண்டு, ஆந்­திரா பக்கம் போய்­விட்ட அஞ்­சலி, வழக்கு, கோர்ட் என, சென்­னையில் பிடி இறு­கி­யதால், தமிழ் படங்­களில் நடிப்­பதை தவிர்த்து வந்தார். சென்­னைக்கு வரு­வ­தையும், அவர் விரும்­ப­வில்லை. இதனால், தமி­ழ­கத்தில் உள்ள அஞ்­ச­லியின் ரசி­கர்கள் ஏமாற்றம் அடைந்­தனர்.  இப்­போது, அவர்­க­ளுக்கு சந்­தோ­ஷ­மான செய்தி கிடைத்­துள்­ளது.
 
தெலுங்கில், மகேஷ் பாபு­வுடன், அவர் நடித்த, ‘சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு படம், தமிழில் டப்பிங் செய்­யப்­ப­டு­கி­றது. விரைவில், தமி­ழ­கத்தில் வெளியாக உள்ள அந்த படத்தில், அஞ்­ச­லிக்கு கலர் கல­ரான டூயட் பாடல்கள் உண்டாம். இதனால், அஞ்­ச­லியின் தமி­ழக ரசி­கர்­க­ளுக்கு விருந்து  காத்­தி­ருக்­கி­றது.

Comments